×

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரும் கிஷான் கார்டு திட்டம்

மதுரை, ஜன.28: விவசாயிகளின் நிதி தேவைகளுக்காக ஒன்றிய அரசின் கிஷான் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இது குறித்து வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறும்போது, ‘‘கிஷான் கடன் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை ஆண்டுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற அடமானம் தேவை இல்லை. வங்கி நடைமுறைகள் ஏதுமின்றி விரைவாக கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்த கிஷான் கடன் அட்டை 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

மேலும் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகளும் உள்ளன. எனவே இதுவரை கிஷான் கடன் அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், கணினி சிட்டா மற்றும் சாகுபடி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அவர்களது கிராமங்களில் நடைபெறும் இதுகுறித்த கூட்டங்களிலோ அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டோ சமர்ப்பிக்கலாம்’’ என்றார்.

The post விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரும் கிஷான் கார்டு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Union Government ,Subbaraj ,Kishan ,
× RELATED போதைப்பொருள் தளமாகும் குஜராத்: அதிமுக மாஜி அமைச்சர் தாக்கு